Thursday 9 May 2019

பால் குடம் எடுத்தல் விழா 2019


ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பச்சரிசி மாவு அபிசேகம் இங்கு மிக சிறப்பு. திருமணம், புத்திர பாக்கியம், தொழில் வளர்ச்சிக்கு சிறந்த பரிகார தலமாகும்.

வருகின்ற வைகாசி 4 ஆம் தேதி (18.05.2019) விசாகத்தன்று பக்தர்களால் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அருள்மிகு மீனாட்சி அம்மன் சொக்கநாதருக்கு பாலபிசேகம் செய்யப்படுகிறது

நிகழ்ச்சி நிரல்

16.05.2018 காலை 7.30 மணிக்கு காப்பு கட்டுதல்

16.05.2018 காலை 8 மணிக்கு சிறப்பு ஆராதனை பூசை

16.05.2018 மாலை 4.30 மணிக்கு பிரதோச பூசை

17.05.2018 காலை 5 மணிக்கு கோ பூசை

17.05.2018 காலை 6 மணிக்கு கணபதி ஹோமம்

17.05.2018 மாலை 6 மணிக்கு அபிசேகம் அலங்காரம்

17.05.2018 மாலை 7.30 மணிக்கு பஜனை

18.05.2018 காலை 5.30 கரிய காளியம்மன் கோவிலிலிருந்து பால் குடம் புறப்படுதல்

18.05.2018 காலை 7.30 பாலபிசேகம்

18.05.2018 காலை 9.00 லட்சார்சனை

18.05. 2019 காலை 10.00 அன்னதானம் நடைபெறுகிறது

ஆகவே ஆன்மீக அன்பர்கள் எங்கள்
முயற்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்
என்று நம்புகிறோம். அனைவரின்
உதவியோடு விழா சிறப்பாக நடக்க
விரும்புகிறோம். அனைவரும் வருகை தந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் அருள் பெற்று செல்ல வெண்டுகிறோம். இவ்விழாவிற்கு நிதியுதவியோ பொறுளுதவியோ கொடுத்து உதவுங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
அரண்மனையார் முத்து ராமையா வள்ளல்
புங்கம்பாடி கிராமம்,
அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம்,.

Cell: 9994483763

mail : pungampadit@gmail.com

No comments:

Post a Comment

சங்காபிசேகம் 2021

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3...